🔸 ஒவ்வொரு ஆண்டும், பிளஸ் 2 தேர்வு முடிவில், அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் பட்டியல் வெளியாகும்.
🔹 குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, பெற்றோர், உறவினர்களால் கண்டிப்புகள் இருக்கும். இதனால், பல மாணவர்கள் மனரீதியாக பாதிக்கப்படுவதுடன், விரும்பத்தகாத சம்பவங்களும் நடக்கும்.
🔸 இதற்கு, இந்த ஆண்டு பள்ளிக்கல்வித் துறை முற்றுப்புள்ளி வைத்துள்ளது;
'ரேங்கிங்' முறை ஒழிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், மாணவர்களின் மதிப்பெண்ணை வைத்து, வணிக ரீதியில் செயல்படும் பள்ளிகளுக்கும், 'செக்' வைக்கப்பட்டுள்ளது.
🔹 இதையடுத்து, பிளஸ் 2 தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பதிலாக, சாதித்த பள்ளிகளின் விபரங்களை, தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது.
🔸 இந்த பட்டியலில், எந்த குறிப்பிட்ட பள்ளிக்கும் முன்னுரிமை கொடுக்கப்படவில்லை.
🔹 தேர்வில் பங்கேற்ற, 6,700 பள்ளிகளிலும் தேர்வு எழுதிய மாணவர் எண்ணிக்கை; பாடவாரியாக தேர்ச்சி பெற்றவர்கள்; 'சென்டம்' பெற்றவர்கள் எண்ணிக்கை; பள்ளியின் சராசரி தேர்ச்சி ஆகியன இடம் பெற்றுள்ளன.
🔸 இதன் மூலம், எந்த பள்ளியில் மாணவர்கள், அதிக அளவில் மதிப்பெண் பெற்றுள்ளனர்; குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளனர்; தேர்ச்சி பெற்றவர்கள் யார்; நுாறு சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகள் எவை என, அனைத்து விபரங்களும், இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்