October 24, 2018

இனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு!!

குரூப் ஏ மற்றும் பி அதிகாரிகளிடம்
எந்த சான்றிதழ்களையும் சான்றொப்பம் பெற வேண்டியது இல்லை என்று தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசு தேர்வுகள், அரசு திட்டங்கள் ஆகியவற்றுக்காக விண்ணப்பிக்கும் போது சான்றிதழ்களின் உண்மைத்தன்மைக்காக குரூப் ஏ மற்றும் குரூப் பி அதிகாரிகளிடம் அதாவது பச்சை இங்கில் கையெழுத்திட தகுதி வாய்ந்த அதிகாரிகள், அரசு
மருத்துவர்களிடம் சென்று அசல் சான்றிதழ்களை காண்பித்து நகல் சான்றுகளில் கையொப்பம் பெற வேண்டியது கட்டாயம்.