January 21, 2017

போராட்ட மாணவர்களுக்கு உதவும் புதிய ஆப் !!

 என்னமா யோசிக்கிறாய்ங்க
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் களநிலவரங்கள் நொடிக்கு நொடி இளைஞர்களால் வாட்ஸ் ஆப், பேஸ்புக் மூலம் அப்டேட் செய்யப்படுகின்றன. இந்த வரிசையில் தற்போது புதிதாக ஒரு விஷயம் இணைந்துள்ளது.


அதுதான் இந்த ஃபயர்சாட். வாட்ஸ்அப் போலவே மெசேஜிங் அப்ளிகேஷன்தான் இந்த ஃபயர்சாட். ஆனால், செயல்படும் விதம், பயன்பாடுகள் அனைத்தும் வேறு மாதிரியாக இருக்கிறது.

அதுவும் ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டங்கள் தமிழகத்தில் தீவீரம் அடையத் துவங்கியதுமே, இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்ய சொல்லி, எல்லா வாட்ஸ்அப் க்ரூப்களுக்கும் மெசேஜ்கள் அனுப்பப்பட்டுள்ளன. போலீசார் ஜாமர் வைத்தாலோ, இணைய வசதியை துண்டித்தாலோ கூட இதன் மூலம் சாட் செய்யலாம்.

எப்படி செயல்படுகிறது ஃபயர்சாட்?
இந்த ஃபயர்சாட்டில் இணையவசதி தேவையில்லை. உங்கள் மொபைல் போனின் ப்ளூடூத் அல்லது வைஃபை ஆகிய இரண்டில் ஒன்று இயங்கினாலே போதும்.

இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்து, உங்களுடைய மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் முகவரி கொடுத்து பதிவு செய்து கொண்டால் உங்கள் மொபைலின் ப்ளூடூத் ஆன் ஆகிவிடும்.

உங்கள் மொபைலில் இன்டர்நெட் வசதி இல்லையென்றால் 200 மீட்டர் வரை தகவல் அனுப்ப முடியும் என்கிறது ஃபயர்சாட். இணைய வசதி இருந்தால், உலகம் முழுவதும் இருக்கும் அனைவருக்கும் அனுப்பலாம்.

ஆனால் இதன் மூலம் அதிக தூரத்திற்கு செய்திகளை அனுப்ப முடியாதே என்ற சந்தேகம் வரலாம். அங்குதான் ஃபயர்சாட்டின் சூப்பர் டெக்னி’ இருக்கிறது. சென்னையிலிருந்து ஒருவர் கோவையில் இருப்பவருக்கு இணைய வசதி இல்லாத இடத்தில் இருந்து, செய்தி அனுப்ப வேண்டும் என்றாலும் தாரளமாக அனுப்பலாம்.

உதாரணமாக 100 பேர் கொண்ட ஒரு குழுவில், ஒருவர் சென்னையில் இருந்து கோவைக்கு செய்தி அனுப்பினால், அந்த செய்தியானது அந்த குழுவில் இருக்கும் அனைவரின் மொபைலுக்குமே ப்ளூடூத் மூலம் சென்றுவிடும்.

ஒருவேளை அந்த குழுவில் இருக்கும் யாரேனும் ஒருவரின் மொபைலில் இணைய வசதி இருந்தால், அதன் மூலம் கோவையில் இருக்கும் நபருக்கு வந்துசேரும்.

ஆனால் மெசேஜ் அனைத்துமே என்ட் டூ என்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்டிருப்பதால், யாரும் படிக்க முடியாது. இதன் பலமே, இதனைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையில்தான் இருக்கிறது. இணைய இணைப்பு இருக்கும் போது பிரச்னையில்லை.

தற்போது நடக்கும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தமிழக இளைஞர்கள் அனைவரும், போராட்ட விவரங்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த ஆப், உங்களுடைய இருப்பிடத்தையும் காட்டுவதால், யார் எந்த ஊரில் இருந்து பேசுகிறார்கள் என்பதையும், மற்றவர்கள் கண்டறிய உதவுகிறது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்