January 21, 2017

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று (21.01.17) சென்னை வருகிறார்.


📝 ஜல்லிக்கட்டு அவசர சட்டம் பிறப்பிப்பது தொடர்பாக தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், இன்று இரவு சென்னை வருகிறார்.

🐮 ஜல்லிக்கட்டு நடத்த ஏற்ற வகையில், அவசர சட்டம் கொண்டு வர, முதலமைச்சர் ஓ.  பன்னீர்செல்வம் நடவடிக்கை எடுத்துள்ளார்.

🐮 குடியரசுத்தலைவரின் ஒப்புதலுடன், மாநில ஆளுநர் அவசர சட்டத்தைப் பிறப்பிப்பார்.

🐮 இன்று (21.01.17) அல்லது நாளை (22.01.17) அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.



🐮 இந்நிலையில், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், இன்று இரவு மும்பையிலிருந்து, சென்னை திரும்புகிறார்.

🐮 ஞாயிறு அன்று ஆளுநர் சென்னை வர திட்டமிடப்பட்டிருந்த நிலையில் முன்னதாகவே அவர் சென்னை வருவது குறிப்பிடத்தக்கது.

🐮 மூன்று நாட்கள், சென்னையில் தங்கும் அவர், வரும், 23ல், தமிழக சட்டசபையில் உரை நிகழ்த்த உள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்