January 21, 2017

"நெட்" தேர்வு நாளை நடக்குமா?


மத்திய கல்வி வாரியம் - சி.பி.எஸ்.இ., சார்பில், நாளை நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள, 'நெட்' தகுதித் தேர்வு, நடைபெறுமா என்ற குழப்பம், தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
உதவி பேராசிரியர்கள் தேர்வு மற்றும் ஆராய்ச்சி படிப்புக்கான கல்வி உதவித்தொகைக்கு, 'நெட்' தகுதித் தேர்வு, ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படுகிறது. ஜல்லிக்கட்டு போராட்டம், தமிழகத்தில் தீவிரமடைந்து, கல்லுாரி, பல்கலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 'நெட்' தகுதித் தேர்வு, நாளை நடக்குமா என்ற குழப்பம் எழுந்துள்ளது.

கோவை மாவட்ட, 'நெட்' தேர்வு ஒருங்கிணைப்பாளர் நவமணி கூறுகையில், ''நெட் தேர்வு நடைபெறும் தேதியில், எவ்வித மாற்றமும் இல்லை. டில்லியிலிருந்து கோவை வந்துள்ள அதிகாரிகள், ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில், 17 கல்வி நிறுவனங்கள், தேர்வு மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன,'' என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்