December 30, 2016

தமிழகத்தில் வோடஃபோன் 4ஜி சேவை அறிமுகம்...


வோடஃபோன், தனது 4ஜி சேவைகளை தமிழகத்தில் அறிமுகம் செய்துள்ளது.
இந்தியா முழுக்க ஜியோ 4ஜி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் வோடஃபோன், தனது 4ஜி சேவைகளை விரிவுப்படுத்தி வருகிறது. ஏற்கனவே
கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், அசாம் மற்றும் டெல்லி, மும்பை,கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களிலும் வோடஃபோன் 4ஜி சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் முகற்கட்டமாக 'Vodafone Supernet 4G' என்ற பெயரில் புதிய சேவைகளை நேற்று கோவை, திருப்பூரில் மட்டும் அறிமுகம் செய்துள்ளது. தொடர்ந்து கோவா, பஞ்சாப், உத்திரப் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2400 நகரங்கள் மற்றும் 17 வட்டாரங்களில் அடுத்த ஆண்டு (2017) மார்ச் மாதத்திற்குள் 4ஜி சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக வோடஃபோன் தெரிவித்துள்ளது. அறிமுக சலுகையாக வாடிக்கையாளர்கள் அப்கிரேடு செய்யும் புதிய 4ஜி சிம் கார்டுகளுடன் அதிவேக 4G இண்டர்நெட் மற்றும் அனைத்து அப்கிரேடுகளுக்கும் 2 ஜிபி இலவச டேட்டாவும் வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்களுக்கு மேலும் பல்வேறு புதிய சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்