November 26, 2016

தமிழக பள்ளிகளில் போட்டித் தேர்வு வகையிலான வினாத்தாள் தேர்வு விரைவில் 12 ம் வகுப்பு வரையிலும் நீட்டிப்பு செய்ய வாய்ப்பு...

📋 தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிமுகம் செய்துள்ள  போட்டித் தேர்வு வகை வினாத்தாள் தேர்வை, விரைவில் 12ம் வகுப்பு வரையிலும் நீட்டிப்பு செய்யலாமா என அதிகாரிகள் பரிசிலனை செய்து வருகின்றனர்.


📝 அரசு பள்ளி மாணவர்கள், 'நீட், ஜே.இ.இ.,' போன்ற நுழைவுத் தேர்வுகளிலும், தங்கள் திறனை காட்டும் வகையில்,
அவர்களுக்கு புதிய வினாத்தாள் முறையை, தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது.

📚 தமிழக அரசின் குழந்தைகள் தின விழாவில், இதற்கான அறிவிப்பை, தமிழக  பள்ளிக்கல்வித்துறைச்செயலர் சபிதா வெளியிட்டார்.

📝 வினாத்தாளில் உள்ள நான்கு விடைகளில், சரியானதை தேர்வு செய்வது, மாணவர்களின் தேர்வு பயத்தை போக்குவதோடு, குழப்பமான வினாவுக்கும், விடை கண்டுபிடிக்கும் பக்குவத்தையும் ஏற்படுத்துவது தெரிய வந்துள்ளது.

📝 வரும் ஆண்டுகளில், பிளஸ் 2 வரையிலும், இந்த முறையிலான மாதிரி தேர்வை அறிமுகம் செய்ய அதிகாரிகள் பரிசிலனை செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்