August 21, 2017

Flash News:ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராக நியமனம்

மாஃபா பாண்டியராஜனுக்கு தமிழ் வளர்ச்சி, தொல்லியல் துறையும் ஒதுக்கீடு.

அதிமுகவின் அணிகள் இணைந்த நிலையில் தமிழக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஓ. பன்னீர்செல்வம் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நிதி துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உடுமலை ராதாகிருஷ்ணன் கால்நடைத் துறை அமைச்சராகவும், பாலகிருஷ்ண ரெட்டி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையும் மாஃபா பாண்டியராஜனுக்கு தமிழ் வளர்ச்சி, தொல்லியல் துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


நீண்ட இழுபறிக்குப் பின்னர் இன்று ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் இணையும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து, பிற்பகல் மூன்று மணிக்கு புதிய அமைச்சரவை பதவி ஏற்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அப்படி புதிய அமைச்சரவை பதவி ஏற்றால் அதில், பிரிந்து சென்ற ஓபிஎஸ் அணியைச் சேர்ந்தவர்களுக்கும் அமைச்சர் பொறுப்புக்கள் வழங்கப்பட உள்ளன. அந்த வகையில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்குத் துணை முதல்வர் பதவி வழங்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்