August 04, 2017

ஓய்வூதிய திட்டம் ஆராயும் குழுவுக்கு புதிய தலைவர்

பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்வதற்கான, சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட, வல்லுனர் குழுவின் தலைவராக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி, ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளார்.


'பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கு பதிலாக, ஏற்கனவே அமலில் இருந்த, பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும்' என, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று, இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.,அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையில், 2016 பிப்., 22ல், வல்லுனர் குழு அமைக்கப்பட்டது.குழுவும், பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து, ஏழு நாட்கள் கூட்டம் நடத்தி, அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தது.

இந்நிலையில், மத்திய அரசானது, புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை மேம்படுத்துவதற்கான, சாத்தியக்கூறுகளை ஆராய, 2016 அக்., 21ல், ஒரு குழுவை நியமித்தது. அந்தக் குழுவின் பரிந்துரைகளையும் பரிசீலித்து, வல்லுனர் குழு அறிக்கை தயாரிக்க இருந்தது. ஆனால், குழுவின் தலைவராக இருந்த, சாந்தா ஷீலா நாயர், திடீரென தன் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, வல்லுனர் குழுவின் புதிய தலைவராக, ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஸ்ரீதரை, தமிழக அரசு நியமித்துள்ளது. குழுவானது, ஓய்வூதியம் குறித்த அறிக்கையை, நவம்பர் இறுதிக்குள் சமர்பிக்க வேண்டும் என்றும், உத்தரவிடப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்