July 15, 2017

பள்ளி மாணவர்களுக்கு இனி ஆண்டுதோறும் காமராஜர் விருது வழங்கப்படும் - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.


 இந்த விருதானது மாவட்டந்தோறும் 10,12ம் வகுப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு விருது வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பினை விருதுநகரில் நடைபெற்ற காமராஜர் பிறந்தநாள் விழாவில் தெரிவித்துள்ளார்.

9,10,11-ம் வகுப்பு வகுப்பறைகளை கணினிமயமாக்க திட்டம்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

ரூ.362 கோடியில் 9,10,11-ம் வகுப்பு வகுப்பறைகளை கணினிமயமாக்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார்.

3,000 பள்ளிகளுக்கு தலா ரூ.2 லட்சத்தில் ஸ்மார்ட் வகுப்பு அமைக்க ரூ.60 கோடியில் திட்டமிடப்பட்டுள்ளது.

 1.20 லட்சம் மாணவர்களை பாதுகாக்கும் திட்டம் ஒரு மாதத்தில் அறிவிக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.

நீட் உள்ளிட்ட தேர்வுகளை எதிர்கொள்ள 54,000 கேள்வி பதில்கள் கொண்ட சிடி தயாரிக்கப்பட்டு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்