May 19, 2017

தமிழகம் முழுவதும் ஆசிரியர் கலந்தாய்வு இன்று தொடக்கம்: 31ம் தேதி வரை நடக்கிறது


தமிழகம் முழுவதும் தொடக்க கல்வித்துறை, பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு இன்று (19ம் தேதி) தொடங்குகிறது. 31ம் தேதி வரை ஆசிரியர் கலந்தாய்வு நடக்கிறது.


தமிழகம் முழுவதும் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வித் துறையின் மூலமும், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலமும் ஒவ்வொரு ஆண்டு மே மாதம் பணி மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான கலந்தாய்வு இன்று (19ம் தேதி) தொடங்குகிறது.

பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நடத்தப்படும் கலந்தாய்வு விவரம் வருமாறு:

19.05.2017 - அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்.

20.05.2017 - அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு.

22.05.2017 - அரசு, நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்.

24.05.2017 - அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுநிலை, தொழிற்கல்வி ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் மாறுதல்.

25.05.2017 - அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுநிலை, தொழிற்கல்வி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்.

27.05.2017 - அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு.

28.05.2017 - உடற்கல்வி, கலை, இசை, தையல், இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் மாறுதல், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்.

 29.05.2017 - பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் மாறுதல்.

30.05.2017 - பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்.

 31.05.2017 - இடைநிலை, உடற்கல்வி, சிறப்பு ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு.

இதேபோல தொடக்க கல்வித் துறையின் சார்பிலும் கலந்தாய்வு இன்று(19ம் தேதி) தொடங்கி 30ம் தேதி வரை நடத்தப்படுகிறது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்