தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் இளமாறன் மற்றும் நிர்வாகிகள், நேற்று பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையனிடம் கொடுத்த மனு:
தமிழகத்தில், வரலாறு காணாத வகையில், வெயில் இருப்பதால், சிறுவர் முதல், பெரியவர் வரை, வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளது. 20 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், வெயில் சதத்தை தாண்டி உள்ளது.
கற்றல் - கற்பித்தல் பணி என்பது, உடலும், உள்ளமும் சீராக இருந்தால் மட்டுமே, சிறப்பாக அமையும். எனவே, மாணவர்கள் உடல் நலன் கருதி, ஜூன், 1ல் பள்ளிகளை திறக்காமல், வெயிலின் அளவு குறையும் வரையோ அல்லது இரண்டு வாரங்களோ தள்ளி திறக்க
வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்