🔹 இதுபோன்று பள்ளிகளில் கடைகள் திறப்பது, பள்ளிகளின் விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
🔸 நாடு முழுவதும் சுமார் 20 ஆயிரம் சிபிஎஸ்இ பள்ளிகள் இயங்கி வருகின்றன.
🔹 சிபிஎஸ்இ பள்ளி வளாகத்தில் இயங்கும் கடைகளில் மட்டுமே அல்லது பள்ளியால் குறிப்பிடப்படும் கடைகளில் மட்டுமே பொருட்களை வாங்க பெற்றோர் வற்புறுத்தப்படுவதாக, சிபிஎஸ்இ-க்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளன.
🔸 இதையடுத்தே, பள்ளிகளுக்கு இந்த அறிவுறுத்தல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
🔹 பள்ளி வளாகத்திலேயே புத்தகங்கள் விற்பனை செய்யப்படுவதை எந்த வகையிலுமே ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔸 சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்ற பள்ளிகளுக்கான உயர் அதிகாரி கே. சீனிவாசன் இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பள்ளி வளாகத்திலோ அல்லது பள்ளி குறிப்பிடும் வேறு ஒரு கடையிலோ தான், புத்தகங்கள், நோட்டு, பென்சில், பேனா முதல், சீருடை, ஷூ, பள்ளிப் பை என அனைத்தையும் வாங்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் நிர்பந்திப்பதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறினார்.
🔹 இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என்று பள்ளிகளை எச்சரிப்பது இது முதல் முறை இல்லை என்றாலும், இது இறுதியான எச்சரிக்கையாக இருக்கும் என்றும், ஒருவேளை இதுபோன்ற வியாபார நடவடிக்கைகளை பள்ளிகள் தொடர்ந்தால், நிச்சயம் அந்த பள்ளியின் கல்வி அளிக்கும் உரிமம் ரத்து செய்யப்படும் என்று உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்