March 26, 2017

ஏப்ரல் 1 ஆம் தேதி வரை வங்கிகளுக்கு விடுமுறை இல்லை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு.


'பொதுத்துறை வங்கிகள், மார்ச், 25 முதல் ஏப்ரல், 1 வரை விடுமுறையின்றி, செயல்பட வேண்டும்' என, ரிசர்வ் வங்கி திடீர் உத்தரவு  பிறப்பித்துள்ளது.




இது குறித்து, அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு பொதுச் செயலர் டி.டி.பிராங்கோ
கூறியதாவது: வருமான வரி, வணிக வரி மற்றும் சேவை வரி உள்ளிட்ட, அரசின் பல்வேறு வரிகளை  வசூலிக்கும், பொதுத்துறை வங்கிக் கிளைகள், மார்ச், 25 முதல் ஏப்ரல், 1 வரை விடுமுறையின்றி செயல்பட வேண்டும் என, மார்ச், 24 நள்ளிரவு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனால், விடுமுறை நாளான, நேற்றும்
அலுவலகம் வர வேண்டிய நிலை ஏற்பட்டது.

எனினும், வாடிக்கையாளர்கள் வரவில்லை. இன்று ஞாயிற்றுக் கிழமையும் வர வேண்டும்.
மேலும், தெலுங்கு வருடப்பிறப்பு, குடிபத்வா உள்ளிட்ட, பல்வேறு விடுமுறை நாட்களிலும் பணிக்கு வர வேண்டியிருக்கும்.

 இதனால்,
விடுமுறை நாளில் மேற்கொள்ள இருந்த,
ஊழியர்களின் பல பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. 'ஆன்லைன்' பரிவர்த்தனை பெருகியுள்ள நிலையில், இந்த முடிவு தேவையற்றது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்..

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்