✳ கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தில், தேசிய மனிதவள மேம்பாட்டு மையம் சார்பில், 'டிஜிட்டல், ஆன்லைன் மூலம் பணமில்லா பரிவர்த்தனை' தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடந்தது.
✳ இதில், சென்னை ரிசர்வ் வங்கி, உதவி பொது மேலாளர் சரவணன் பேசியதாவது:
✳ ஏப்ரல் 1ல் இருந்து பணமில்லா பரிவர்த்தனையை மக்களிடம் அதிகப்படுத்தும் நோக்கில், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
✳ மக்களிடையே, 10 ரூபாய் நாணயம் செல்லாது என்ற கருத்து வேகமாக பரவி வருகிறது.
✳ இது, தவறானது. இதை யாரும் நம்பக் கூடாது.
✳ புகார் கொடுத்தால், 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
✳ பஸ்களில், 10 ரூபாய் நாணயம் வாங்க மறுப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து அலுவலகங்களுக்கும் நாணயத்தை பெற்றுக் கொள்ளும்படி, அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
✳ டிஜிட்டல் பரிவர்த்தனை மூலமாக கறுப்புப் பணத்தை கட்டுப்படுத்தலாம்; இதனால், நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லது. இவ்வாறு அவர் பேசினார்.
1 comment:
முதலில் வங்கியில் வாங்கினால் மட்டுமே விழிப்பணர்வு ஏற்படும்
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்