February 26, 2017

பி.எப்., மூலம் வீடு கட்டும் திட்டம்: மார்ச் முதல் துவக்கம்..

புதுடில்லி: பி.எப்., உறுப்பினர்களுக்கு எளிய முறையில், வீடு கட்டும் திட்டத்தை, வருங்கால வைப்பு நிதி அமைப்பு, வரும் மார்ச் மாதம் துவங்குகிறது.


4 கோடி உறுப்பினர்கள்:

இ.பி.எப்., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ், நாடு முழுவதும், அரசு மற்றும் தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின் நலனுக்காக, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன; இதில், நான்கு கோடிக்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

மார்ச் முதல்..

அதன் உறுப்பினர்களுக்கு, எளிய முறையில், வீடு கட்டும் திட்டத்தை, வருங்கால வைப்பு நிதி அமைப்பு, மார்ச் மாதம் துவங்குகிறது. இதன்படி, வருங்கால வைப்பு நிதி அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளவர்கள், வீடு கட்டும் போது, முன் பணம் மற்றும் மாத தவணை தொகையை, தங்கள் பி.எப்., கணக்கில் இருந்து செலுத்த முடியும். மேலும், மத்திய அரசின் பல்வேறு வீட்டு வசதி திட்டத்திற்கான மானியங்கள் மற்றும் உதவிகள், அவர்களுக்கு வழங்கப்படும்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்