February 26, 2017

ரூபெல்லா தடுப்பூசி போடுவது மார்ச் 14 வரை நீட்டிப்பு.


ரூபெல்லா - தட்டம்மை தடுப்பூசி போடுவது, மார்ச், 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மார்ச், 1 முதல், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், இந்த தடுப்பூசி போடலாம்.


இது குறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குனர் குழந்தைசாமி கூறியதாவது:
தமிழகம் முழுவதும், 1.80 கோடி குழந்தைகளுக்கு, ரூபெல்லா - தட்டம்மை தடுப்பூசி போட திட்டமிடப்பட்டு உள்ளது. இதுவரை, 70 லட்சம் குழந்தைகளுக்குத் தான் போடப்பட்டுள்ளது. வரும், 28க்குள், ஒரு கோடி குழந்தைகளுக்கு போடப்பட்டுவிடும்.

தமிழகத்தில், அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும். எனவே, தடுப்பூசி போடுவதற்கான அவகாசத்தை, மார்ச், 14 வரை நீட்டிக்க, மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. மார்ச், 1 முதல், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு பொது மருத்துவமனைகளிலும், இந்த தடுப்பூசி போடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்