February 18, 2017

வங்கிகளில் கல்விக் கடன்களை எளிதாகப் பெற தொடர்பு அதிகாரிகள் விரைவில் நியமனம்: மத்திய அமைச்சர் தகவல்..


கல்விக் கடன்களை எளிதாகப் பெறுவதற்காக, வங்கி தலைமை அலுவலகங்களில் தொடர்பு அதிகாரிகளை நியமிக்கப் போவதாக, மத்திய நிதி மற்றும் நிறுவனங்கள் விவகாரத் துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேவால் தெரிவித்தார்.


"ப்ரீசென்ஸ்' மின் இதழ் மற்றும் கல்விக் கடன் சேவை மையத்தின் சார்பில், சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கல்விக் கடன் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்குவது மத்திய அரசின் சிறந்த திட்டங்களில் ஒன்றாகும். கல்விக் கடன் தொடர்பாக நடத்தப்படும் முதல் கலந்துரையாடல் நிகழ்ச்சி இதுவாகும். இந்த கலந்துரையாடலில் கிடைத்த ஆலோசனைகளின்படி, வங்கிகளிலிருந்து மாணவர்கள் கல்விக் கடன்களை பெறுவதை எளிதாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கல்விக் கடன்களை சுலபமாக பெற வங்கி தலைமையகங்களில் தொடர்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். இதற்கான சுற்றறிக்கை, வங்கிகளுக்கு விரைவில் அனுப்பப்படும். மாணவர்கள் கல்விக் கடன் பெறுவதில் உள்ள சிக்கலைத் தீர்க்க கண்காணிப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்படும். கல்விக் கடன்களுக்காக குறைதீர்ப்பு மையங்கள் உருவாக்கப்படும். கல்விக் கடன் பெறுவது எப்படி அவசியமானதோ, பெற்ற கடன்களைத் திருப்பி செலுத்துவதும் முக்கியமானது. கடன்களை திருப்பி செலுத்தினால் மட்டுமே மற்ற மாணவர்களுக்கு வங்கிகள் கொடுக்க முடியும்.

மாணவர்களின் வசதிக்காக மத்திய அரசு "வித்யாலட்சுமி போர்ட்டல்' என்ற வலைப்பக்கத்தை தொடங்கி உள்ளது. மாணவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஸ்ரீ ராமானுஜரின் ஆயிராமாவது ஜெயந்தியை முன்னிட்டு அவரது நினைவாக நாணயமும், சிறப்பு தபால் தலையும் வெளியிடப்படும் என்றார் அமைச்சர்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்