தேர்தல் பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவதை கைவிடக் கோரும் தனிநபர் மசோதாவை டெல்லி மேல்-சபையில் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா கொண்டு வந்தார். அது குறித்து மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் பதில்
அளிக்கையில் கூறிய தாவது:-
கற்பிக்கும் பணியில் மட்டுமே ஆசிரியர்களை ஈடுபடுத்த வேண்டும் என்ற கருத்தில் நான் உடன்படுகிறேன். தேர்தல் பணியில் யாரை ஈடுபடுத்த வேண்டும் என்பது தேர்தல் கமிஷனின் அதிகாரவரம்புக்கு உட்பட்டது. எனவே, திருச்சி சிவாவின் உணர்வுகள், தேர்தல் கமிஷனுக்கு தெரிவிக்கப்படும். அனைத்து கட்சி கூட்டம் எப்போது நடந்தாலும், இதை வலியுறுத்தி பேச திருச்சி சிவாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.
ஆகவே, அவர் இந்த மசோதாவை வாபஸ் பெற வேண்டும் என கூறினார்.
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்