February 20, 2017

இன்று (20.02.2017) முதல் வங்கி & ATM களில் இருந்து வாரத்திற்கு ₹ 50,000 எடுக்கலாம்: RBI அறிவிப்பு.



💶 வங்கிகளில் வாரத்திற்கு ₹ 24 ஆயிரம் மட்டுமே எடுக்கப்பட்டு வந்தநிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இன்று (20.02.2017) முதல் வாரத்திற்கு ₹ 50ஆயிரம் வரை எடுக்கலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.



💴 2016 நவம்பர் 8 ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து உயர்மதிப்புடைய ₹ 500 மற்றும் ₹ 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது.

💷 அதைத்தொடர்ந்து நாடு முழுவதும் பணப்புழக்கம் தடைபட்டது.

💵 பணம் இல்லாமல் வங்கிகளும், ATM களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

💶 பல இடங்களிலும் போராட்டம் நடைபெற்றது.

💴 அதைத்தொடர்ந்து தற்போது நிலைமை ஓரளவு சீரடைந்து வந்த நிலையில், வங்கிகளில் வாரம்₹ 24 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க ரிசர்வ் வங்க கட்டுப்பாடுகளை விதித்தது.

💷 தற்போது அந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வாரத்திற்கு ₹ 50,000 வரை எடுக்கலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.

💵 2017 மார்ச் 13 ஆம் தேதியில் இருந்து வங்கியில் பணம் எடுக்க எந்த வரம்பும் இருக்காது என்றும் ஏற்கனவே ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்