தனியார் பள்ளி சங்கத்தினர் விடுமுறை அறிவிப்பு வெளியிட்ட நிலையில், அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை விட மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, அரசுத் துறை வட்டாரங்கள் கூறியது: தமிழகத்தில் உள்ள 32
மாவட்டங்களில் ஏதேனும் ஒரு மாவட்டத்தில் இயற்கைச் சீற்றமோ அல்லது அசாதாரண சூழ்நிலையோ ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டால் அங்கு விடுமுறை விடுவதற்கான அதிகாரம் மாவட்ட ஆட்சியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பள்ளி கல்வி இயக்ககத்தின் அனுமதியோ, தமிழக அரசின் ஆலோசனையோ கேட்க வேண்டியதில்லை. மாவட்ட நிலைமையை ஆராய்ந்து ஆட்சித் தலைவரே முடிவெடுத்து அறிவிக்கலாம் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்