January 23, 2017

சென்னையில் பள்ளிகளுக்கு மதியத்துக்கு மேல் விடுமுறை..


ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதையொட்டி இன்று அதிகாலை முதல் அனைத்து பகுதிகளிலும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை, போலீசார்
வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி வருகின்றனர்.

இதைதொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களையும், போலீசார் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், நகரம் முழுவதும் போர்க்களம் போல் காட்சியளிக்கிறது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, இன்று காலை திறக்கப்பட்டது.

ஆனால், சென்னை நகர் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்து வருவதால், இன்று மதியத்துக்கு பின், அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்