January 19, 2017

ஜல்லிக்கட்டுக்கு ஆசிரியர் சங்கங்கள் ஆதரவு...


சென்னை - ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி நடக்கும் போராட்டத்துக்கு ஆதரவாக இன்றும் நாளை (20ம் தேதி)யும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பள்ளிக்கு செல்வார்கள் என்று அந்த சங்கத்தின் தலைவர் தியாகராஜன்
தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் மன்றம், தமிழ்நாடு மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் சங்கம் என அனைத்து ஆசிரியர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

மேலும், சென்னை ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளதாக அதன் ஒருங்கிணைப்பாளர் பூபாலன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கத்தினரும் ஆதரவு தெரிவிக்க இன்று மாலை 4.30 மணிக்கு மெரினா செல்ல இருப்பதாக அதன் தலைவர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்