புதுடில்லி: மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு, மார்ச், 9ல் துவங்குகிறது. பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு தேர்வில், 26 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.
இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., தலைவர் ஆர்.கே.சதுர்வேதி வெளியிட்ட
செய்திக்குறிப்பு:பஞ்சாப், கோவா, உத்தரகண்ட், உத்தரபிரதேசம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் நடக்கும் சட்டசபை தேர்தல், மார்ச், 8ல், முடிகிறது. அதனால், சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு, மார்ச், 9ல், துவங்குகிறது. பிளஸ் 2 வுக்கு, ஏப்., 29 வரையும், 10ம் வகுப்புக்கு, ஏப்., 10 வரையும் தேர்வு நடக்கிறது. 10ம் வகுப்பில், 16.67 லட்சம்; பிளஸ் 2வில், 10.98 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, ஒவ்வொரு பாடங்களுக்கும் இடையே, போதிய இடைவெளி வழங்கப்பட்டு உள்ளது. விடை திருத்த பணிகள், கணினி தொழில் நுட்பத்தில் மேற்கொள்ளப்பட உள்ளதால், தேர்வு முடிவுகள் தாமதமின்றி வெளியிடப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்