January 17, 2017

இனி ஏ.டி.எம்.களில் ரூ. 10,000 வரை எடுக்கலாம்...


ஏ.டி.எம்.ல் ரூ.10 ஆயிரம் வரை எடுக்கலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

கடந்த நவம்பர்8 ம் தேதி மோடி பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இதனால் நாடு முழுவதும் ஏ.டி.எம். பணம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. முதலில் ஒரு முறை 2,500 வரை மட்டுமே எடுக்க அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் 4,500 வரை எடுக்க அனுமதி வழங்கப்பட்டது.

இவ்வாறு வாரத்திற்கு ரூ. 24 ஆயிரம் வரை எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில இனி சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் ரூ.10 ஆயிரம் வரை ஏடிஎம்.களில் எடுத்துக் கொள்ளலாம் என் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வாரத்திற்கு ரூ. 24 ஆயிரம் என்ற கட்டுப்பாட்டில் மாற்றம் செய்யப்படவில்லை.

அதேபோல் நடப்பு கணக்குகளில் இது வரை 50 ஆயிரம் வரை எடுக்கலாம் என்பதை வாரத்துக்கு ரூ.1 லட்சம் எடுக்கலாம். என்றும் அறிவித்துள்ளது. இந்த நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்