November 25, 2016

குரூப்-III, குரூப்-IV தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.

"இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வு தேதியை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

29 செயல் அலுவலர் நிலை-III, 49 செயல் அலுவலர் நிலை- IV பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. செயல் அலுவலர் நிலை -III பணியிடங்களுக்கு ஏப்ரல் 29-ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலிலும், செயல் அலுவலர் நிலை - IV பணியிடங்களுக்கு ஏப்ரல் 30-ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலிலும் தேர்வு நடக்கிறது. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க டிசம்பர் 24-ம் தேதி கடைசி தேதி என்று தெரிவித்துள்ள டிஎன்பிஎஸ்சி, இரண்டு பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்க விரும்புவோர்  தனித் தனியாக தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் கூடுதல் விவரங்களை அறியலாம் என்று கூறியுள்ளது." -

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்