November 04, 2016

பெட்ரோல் பங்க் நேரம் நாளை முதல் குறைப்பு


நாளை முதல், பெட்ரோல் பங்க் வேலை நேரத்தை குறைக்க, உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 4,750 பெட்ரோல் பங்க்குகள் உள்ளன. ஒரு
பங்க்கில் மாதம்தோறும் சராசரியாக, 1.70 லட்சம் லிட்டர் பெட்ரோல், டீசல் விற்பனையாகிறது. டீலர் கமிஷனை உயர்த்தி தருமாறு, பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், எண்ணெய் நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுத்தனர். அதை, மத்திய அரசு அமைத்த கமிட்டி பரிந்துரை அளித்தும், எண்ணெய் நிறுவனங்கள் அமல்படுத்தவில்லை.

இதனால், எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், பல கட்ட போராட்டத்தை அறிவித்தனர். அதன்படி, கடந்த மாதம், 19, 26ல் இரவு, 7:00 முதல், 7:15 வரை, பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டன. நேற்று, பெட்ரோல், டீசல் கொள்முதலை நிறுத்தினர்.
இதுகுறித்து, தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்ஸ் கூட்டமைப்பு தலைவர், முரளி கூறியதாவது:டீலர் கமிஷன் தொடர்பாக, மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில், எண்ணெய் நிறுவனங்களிடம், நாளை பேச்சுவார்த்தை நடக்கிறது. அதில், கமிஷனை உயர்த்தி தர ஒப்புக் கொள்ளாவிட்டால், 5ம் தேதியில் இருந்து, காலை, 9:00 முதல், மாலை, 6:00 வரை மட்டும் பங்க் திறக்கப்படும். பின், வங்கிகள் போல், பெட்ரோல் பங்க்குகளுக்கும், வார விடுமுறை விடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்