November 27, 2016

ஆதார்' விபரம் பதியாதவர்கள் ரேஷன் கார்டு ரத்து?


ரேஷனில், 'ஆதார்' எண் பதியாதவர்களின், ரேஷன் கார்டை ரத்து செய்வதாக வெளியான தகவலை, அதிகாரிகள் மறுத்துள்ளனர்.தமிழக அரசு, காகித ரேஷன் கார்டுக்கு பதில், 'ஸ்மார்ட்' கார்டு வழங்க உள்ளது. இதற்காக, ரேஷன் கடைகளில், 'பாயின்ட் ஆப் சேல்' என்ற கருவி வழங்கப்பட்டுள்ளது. 
அதில், ரேஷன் கார்டுதாரரின், 'ஆதார்' எண், அலைபேசி எண் உள்ளிட்ட விபரங்கள் பதிவு
செய்யப்படுகின்றன.ரேஷன் கடைக்கு செல்லாமல், டி.என்.இ.பி.டி.எஸ்., என்ற அலைபேசி , 'ஆப்' மூலமும், அந்த விபரங்களை பதியலாம்.ஆனால், பலர், ஆதார் விபரத்தை பதிவு செய்யாமல், அலட்சியமாக உள்ளதால், ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி தாமதமாகி வருகிறது.இந்நிலையில், மதுரை மாவட்டம், திருமங்கலத்தில், ஆதார் எண் பதியாத, 1,500 ரேஷன் கார்டுகளை, மாவட்ட உணவு துறை அதிகாரிகள் ரத்து செய்தாக, தகவல் வெளியானது. ஆனால், அந்த தகவலை, உணவு வழங்கல் உயரதிகாரிகள் மறுத்தனர்.
இது குறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ரேஷனில், பலர், ஆதார் விபரம் பதிவு செய்யாமல் இருப்பதால், ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது உண்மை; அதற்காக, ஆதார் பதியாத ரேஷன் கார்டுகளை ரத்து செய்வதாக வெளியாகும் தகவலை, மக்கள் நம்ப வேண்டாம்.
டிச., முதல், ஆதார் பதிவு செய்யாத வீடுகளில், அதிகாரிகள் ஆய்வு செய்து, அதற்கான காரணத்தை கண்டறிய உள்ளனர். எனவே, இதுவரை ஆதார் பதியாமல் உள்ளவர்கள், விரைவில், அந்த விபரத்தை வழங்கினால், விரைவாக, ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.


எத்தனை பேர் (கோடியில்)
ரேஷன் கார்டில் உள்ள

உறுப்பினர்கள் - 7.72
ஆதார் பதிவு
செய்தவர்கள் - 5.27
ஆதார் பதியாதவர்கள் - 2.45
அலைபேசி எண்
பதிவு செய்தவர்கள் - 1.68 

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்