July 20, 2018

TNPSC குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை 32 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு!


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை 32 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.



குரூப்-1 தேர்வு மூலம் நிரப்பப்படும் டிஎஸ்பி, துணை ஆட்சியர் பணிக்கான வயது வரம்பு உயர்த்தி அறிவிக்கப்படும் என பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்த நிலையில், இன்று அதற்கான அரசாணை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இடஒதுக்கீடு பிரிவினரான எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 35-இல் இருந்து 37 ஆகவும், பொதுப்பிரிவினருக்கு 30-இல் இருந்து 32 ஆகவும் உயர்த்தி இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பு மூலம் குரூப்-1 தேர்வை எழுதுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்