June 21, 2018

ஆசிரியர் பகவான் பணியிட மாறுதல் நிறுத்தி வைப்பு..

சமுத்திரக்கனி இயக்கிய 'சாட்டை' படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியை போல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தவரின் பணியிட மாற்றத்தால் அந்த பள்ளியின் மாணவர்கள் கதறி அழுதனர் என்ற செய்தியை சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் மாணவர்களின்
பாசப்போராட்டத்திற்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது. ஆம், திருவள்ளூரை அடுத்துள்ள வெளியகரம் அரசு பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்த பகவான் என்பவரின் பணியிட மாறுதல் உத்தர்வை 10 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் என்பவர் கூறியுள்ளார். இதனால் ஆசிரியர் பகவான் மீண்டும் அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராக தொடர்கிறார்...

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்