தேனி: போடி குரங்கணியில் மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 40 பேர் காட்டுத்தீயில் சிக்கினர். மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.போடி அருகே குரங்கணி- கொழுக்கு மலைப்பகுதியில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற கோவை, ஈரோடு பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் காட்டுத்தீயில் சிக்கியுள்ளனர்.
இதில் சிக்கிய பலருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. காட்டுத்தீ ஏற்பட்டுள்ள இடத்துக்கு விரைந்துள்ள தேனி மாவட்ட கலெக்டர் தீயில் சிக்கிய மாணவர்களை மீட்கும் பணி விரைவாக நடந்து வருவதாக தெரிவித்தார். காட்டுத் தீ பரவும் இடத்திற்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன. மாணவர்களை மீட்கும் முயற்சியில் போலீசார், அப்பகுதி பொதுமக்கள் பாடுபட்டு வருகின்றனர்.
மேலும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். காட்டுத்தீயில் சிக்கிய மாணவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாக மாவட்ட எஸ்.பி., பாஸ்கரன் தெரிவித்தார்.
இந்நிலையில் வனப்பகுதியில் சிக்கிய மாணவர்களை மீட்க விமானப்படைக்கு ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து ராணுவ விமானப்படை விமானங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. தேனி கலெக்டருடன் தொடர்பு கொண்டு மீட்புப் பணியில் ஈடுபடுமாறு அவர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
இதில் சிக்கிய பலருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. காட்டுத்தீ ஏற்பட்டுள்ள இடத்துக்கு விரைந்துள்ள தேனி மாவட்ட கலெக்டர் தீயில் சிக்கிய மாணவர்களை மீட்கும் பணி விரைவாக நடந்து வருவதாக தெரிவித்தார். காட்டுத் தீ பரவும் இடத்திற்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன. மாணவர்களை மீட்கும் முயற்சியில் போலீசார், அப்பகுதி பொதுமக்கள் பாடுபட்டு வருகின்றனர்.
மேலும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். காட்டுத்தீயில் சிக்கிய மாணவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாக மாவட்ட எஸ்.பி., பாஸ்கரன் தெரிவித்தார்.
இந்நிலையில் வனப்பகுதியில் சிக்கிய மாணவர்களை மீட்க விமானப்படைக்கு ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து ராணுவ விமானப்படை விமானங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. தேனி கலெக்டருடன் தொடர்பு கொண்டு மீட்புப் பணியில் ஈடுபடுமாறு அவர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்