February 18, 2018

தமிழகத்தில் 500 ரோபோ கணினி செயல்விளக்க மெஷின்கள் பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டு அதன்மூலம் மாணவ, மாணவிகளின் கல்வித்தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் தகவல்.






Thanks to 🙏
தந்தி தொலைக்காட்சி

📚 நாமக்கல் மோகனூர் சாலையில் அமைந்துள்ள நாமக்கல் தெற்கு அரசுப்பள்ளியின் 125-வது ஆண்டுவிழா நேற்று (17.2.2018) நடைபெற்றது.

 இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜயபாஸ்கர், தங்கமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.

🔹 விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், “தனியார் பள்ளிகள் அதிகமானதால், தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.

🔸 அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் சேர்க்கையை அதிகப்படுத்த தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றார்.

📚 அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில்,

🔹 தமிழகத்தில் மேலும் 312 அரசு பள்ளிகளில் நீட் தேர்வு மையங்கள் துவக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், நீட்தேர்வு மையங்களின் எண்ணிக்கை 412 ஆக அதிகரித்துள்ளது.

🔸 தமிழகத்தில் வரும் காலத்தில் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில், நீட்தேர்வு மட்டுமின்றி அனைத்து தேர்வுகளையும் எளிதாக எதிர்கொள்ளும் வகையிலும், பிளஸ்- 2 முடித்தவுடனேயே வேலைவாய்ப்பை உறுதி செய்யும் அளவிற்கும் பாடத்திட்டங்கள் இருக்கும். பெற்றோர்கள், மாணவர்கள் கல்வி குறித்த சந்தேகத்தை தெளிவுபடுத்தும் வகையிலும், எந்த பாடத்திட்டத்தை தேர்வு செய்தால் என்ன பயன் என தெரிந்து கொள்ளும் வகையிலும் விரைவில் ‘14417’ என்ற இலவச எண் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த எண்ணில் 24 மணிநேரமும் தொடர்புகொண்டு கல்வி குறித்த சந்தேகங்களை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

🔹 10 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட்கிளாஸ் நடத்த வழிவகுக்கப்படும்.

🔸 மாணவர்கள் விபத்தில் சிக்க நேர்ந்து உயிரிழந்தால் ஒரு லட்ச ரூபாயும், பெரிய காயம் அடைந்தால் ரூ.50 ஆயிரமும், சிறிய காயம் அடைந்தால் ரூ.25 ஆயிரம் ரூபாயும் விபத்தில் சிக்கிய 48 மணி நேரத்திற்குள் வழங்கப்படும்” என்றார்.

📚 நிகழ்ச்சி முடிந்த பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி, அனைத்து துறைகளிலும் சாதனை படைக்கும் மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது.

🔹 வெல்பிரண்டு என்ற புதிய ஹெல்ப்லைன் திட்டம் துவக்கப்பட்டு, தேர்வுகளை எதிர்கொள்ளும் திறன், மனஅழுத்தம் குறைப்பதற்கான வழிகள் போன்றவை மாணவர்களுக்கு வழங்கப்படும்.

🔸 தமிழகத்தில் 500 ரோபோ கணினி செயல்விளக்க மெஷின்கள் பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டு அதன்மூலம் மாணவ, மாணவிகளின் கல்வித்தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்