January 03, 2018

அரசு மருத்துவமனையில் ஆபரேஷன் செய்துகொண்ட கலெக்டர்: குவியும் பாராட்டுகள்.!!

அரியலூர் மாவட்ட கலெக்டராக லெட்சுமிபிரியா பணியாற்றி வருகிறார். இந்நிலையில்., நேற்று முன்தினம் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. தன்னை அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கலெக்டர் லெட்சுமிபிரியா கூறியுள்ளார்.



இதனையடுத்து கலெக்டர் லெட்சுமி பிரியாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு குடல் வால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

கலெக்டர் தனக்கு அரசு மருத்துவ மனையில் அறுவை சிகிச்சை செய்யும்படி கேட்டு கொண்டார். அதன்படி அவருக்கு அரியலூர் அரசு மருத்துவ மனையில் நேற்று இரவு குடல்வால் அறுவை சிகிச்சை நடைபெற்றது.

வழக்கமாக கலெக்டராக இருப்பவர்கள் தனியார் மருத்துவமனையில்தான் சிகிச்சை பெறுவார்கள். ஆனால்., கலெக்டர் லெட்சுமி பிரியா தனியார் மருத்துவமனையில் சிகிச்சைன் பெறாமல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டுள்ளதை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.


No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்