January 14, 2018

அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பள்ளியில் தமிழ் வழியில் பயின்றவர் இன்று இஸ்ரோவின் தலைவர். - இஸ்ரோவின் புதிய தலைவர் முனைவர் கே. சிவன் பற்றிய சில தகவல்கள்.



🔸 கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்து தற்போது  இஸ்ரோவின் தலைவராக பொறுப்பேற்று உள்ளார். தமிழக விஞ்ஞானி முனைவர் கே. சிவன்.

🔹 இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த விஞ்ஞானி முனைவர்  கே.சிவனை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

🔸 கடந்த 2015 ஜனவரி 12ம் தேதி இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்ற ஏ.எஸ்.கிரண்குமாரின் பதவிக்காலம் முடிவடைவதை அடுத்து, தற்போது விஞ்ஞானி  முனைவர் கே. சிவன் இந்த பதவியை ஏற்றுள்ளார்.

🔹 தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்பது இதுவே முதல் முறை. இவர் நாகர்கோவிலை சேர்ந்தவர்.

விஞ்ஞானி முனைவர் கே சிவன்:

விஞ்ஞானி முனைவர் கே.சிவன், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சரக்கல்விளை கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர்.

🔸 தந்தை கைலாசவடிவு  நாடார், தாயார் செல்லம்.

🔹 சரக்கல்விளை அரசு தொடக்கபள்ளியில் சிவன் ஆரம்ப கல்வி பயின்றார்.

🔸 வல்லன் குமாரவிளை அரசு உயர்நிலை பள்ளியில் 10 ஆம் வகுப்பு வரை படித்தார்.

🔹 பின்னர் பியுசி படிப்பை நாகர்கோவில் தெ.தி.இந்து கல்லூரியில் முடித்தார். தொடர்ந்து பி.எஸ்சி கணிதம் பட்ட படிப்பும் அங்கு பயின்றார்.

🔸 கடந்த 1980ல் சென்னையில் உள்ள எம்.ஐ.டி.யில் ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் முடித்துவிட்டு தன்னுடைய முதுகலை படிப்பை பெங்களூரில் உள்ள ஐஐஎஸ்சியில் 1982-ல் முடித்தார்.

பி.எஸ்.எல்.வி. ராக்கெட் உருவாக்கம்:

🔹இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் திட்டமிடுதல் மற்றும் வடிவமைப்புக் குழுவில் கடந்த 1982 இணைந்த சிவன், அந்த ராக்கெட் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றினார்.

🔸இஸ்ரோவின் பிஎஸ்எல்வி திட்டத்தின் திட்டமிடுதல் மற்றும் வடிவமைப்புக் குழுவில் இணைந்த சிவன், தொடர்ந்து பல்வேறு திட்டங்களில் தன்னை இணைத்துக் கொண்டார். தன்னுடைய பணிக்காலத்தில் பல்வேறு விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.
 
ஜி.எஸ்.எல்.வி. டி-5 ராக்கெட்:

🔹 2014ல் ஜி.எஸ்.எல்.வி. டி-5 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட போது அதன் திட்ட இயக்குநராக பணியாற்றியிருந்தார்.

🔸 ராக்கெட்டை விண்ணில் ஏவும்போது அதன் பாதையை விண்ணில் தீர்மானிப்பது தொடர்பான மென்பொருளை உருவாக்கியவர்.

🔹 ஆய்வுகள் வாயிலாக ஜிஎஸ்எல்வி ராக்கெட்கள் தோல்விக்கான காரணங்களை கண்டறிந்து அதில் சிவன் வெற்றி கண்டார்.
 
விக்ரம் சாராபாய் விண்வெளி நிலையம்:

🔸 இஸ்ரோவின் மிகப்பெரிய விண்வெளி நிலையமாகக் கருதப்படும் திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி நிலைய இயக்குநராகப் பணியாற்றுவதற்கு முன்பாக, நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள திரவ இயக்கத் திட்ட மையத்தின் இயக்குநராக சிவன் பணியாற்றினார்.

🔹 சிவன் தற்போது திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார். மனைவி மாலதி, 2 மகன்கள். மூத்த மகன் சித்தார்த், பி.டெக் படிக்கிறார். இளைய மகன் சிஷாந்த், அனிமேஷன் டெக்னாலஜி படித்து வருகிறார்.
 
நண்பர்கள் மகிழ்ச்சி:

இஸ்ரோவின் தலைவராக சிவன் தற்போது பொறுப்பு ஏற்றுள்ளதால் முனைவர் கே. சிவனின் சொந்த ஊர் மக்களும் நண்பர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்