December 28, 2017

Flash News: நீட் தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இந்த கல்வி ஆண்டே விலை இல்லா மடிக்கணினி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.


🔹 நீட் தேர்வுக்காக அரசு பயிற்சி மையத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயிற்சி பெறும் 75 ஆயிரம் மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இந்த ஆண்டே இலவச லேப்டாப் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.



🔸 தலைமைச் செயலகத்தில் நேற்று (27.12.2017)  செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

🔹 நீட் தேர்வுக்கு எந்த அளவில் வரவேற்பு உள்ளது என்பதை இரண்டு நாளில் தெரிவிக்கிறோம்.

🔸 தமிழகம் முழுதும் 100 மையங்களில் 75,000 மாணவர்கள் பதிவு செய்துபயிற்சி பெறுகின்றனர்.

🔹 சென்னையில் நான்கு மையங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

🔸 அடுத்தாண்டு ஒரு லட்சம் பேருக்கு லேப்டாப் வழங்க முதல்வரிடம் வேண்டுகோள் வைத்துள்ளோம்.

🔹 அது வழங்கப்பட்ட பிறகு அடுத்தாண்டு அவர்கள் மத்திய அரசின் நீட் தேர்வை சிறப்பாக சந்திப்பார்கள்.

🔸 நீட் கோச்சிங் பயிற்சிக்கு பதிவு செய்து வரும் 75,000 மாணவர்கள் அனைவருக்கும் லேப்டாப் வழங்கப்படும்.

🔹 அந்த மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து அடுத்த ஆண்டு வழங்கப்படும் லேப்டாப்பை இந்த ஆண்டே வழங்க உள்ளோம்.

🔸 இதன் மூலம் அவர்கள் மத்திய அரசின் தேர்வை சிறப்பாக எதிர்கொள்வார்கள்.

🔹 பிளஸ் 2 முடித்தும் கல்லூரிக்குச் சென்ற மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க முடியவில்லை. அதற்குக் காரணம் லேப்டாப் தயாரிக்கும் ஒரு நிறுவனம் உயர் நீதிமன்றம் சென்றதால் பிரச்சினை ஏற்பட்டது.  நல்ல நிறுவனத்தை ஆய்வு செய்து எல்காட் நிறுவனத்தை தேர்வு செய்துள்ளோம். அடுத்த ஆண்டு இது போன்ற பிரச்சினை வராது.

இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்