October 18, 2017

ஊதிய முரண்பாடுகளைய வலியுறுத்தல் : தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை...

'பள்ளி தலைமை ஆசிரியர்களின், ௨௧ ஆண்டு கால ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும்' என, தலைமை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர், சாமி.சத்தியமூர்த்தி
வெளியிட்ட அறிக்கை:மத்திய அரசு அறிவித்துஉள்ள படிகள் மற்றும் சலுகைகளை, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். குறைந்த பட்ச ஊதியத்தை, ௧௮ ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்க வேண்டும். ஊதிய உயர்வை, 2016 முதல் கணக்கிட்டு, 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும்.தலைமை ஆசிரியர்களுக்கு, மூன்று ஊதியக்குழுக்களில், தற்காலிக நிவாரணமான, தனி ஊதியமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, தலைமை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டை தமிழக அரசு, தீர்க்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்