September 08, 2017

அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்: தலைமைச் செயலர் வேண்டுகோள்.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவையேற்று, அரசு ஊழியர்கள் -ஆசிரியர்கள், வேலை நிறுத்தத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும் என்று தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:



ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நடத்தி வரும் வேலைநிறுத்தம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வேலைநிறுத்தத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவையேற்று, அரசு ஊழியர்கள் -ஆசிரியர்கள் வெள்ளிக்கிழமை (செப்.8) முதல் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்