🔸பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளைக் களையும் வரை, 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
🔹 இந்த நிலையில், கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசின் சார்பில் ஜாக்டோ ஜியோவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
🔸 அதன்படி தலைமை செயலகத்தில் ஜாக்டோ அமைப்பினர் அமைச்சர்களுடனான பேச்சு வார்த்தை இன்று (செப்டம்பர் 4) நடந்தது.
🔹இந்த பேச்சு வார்த்தையில், அரசு தரப்பில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயகுமார், உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
🔸 இந்நிலையில் அரசிடமிருந்த சாதகமான பதில் வரவில்லையெனில் திட்டமிட்டபடி வேலை நிறுத்த போராட்டம் நடக்கும் என ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.
🔹 இதையடுத்து ஜாக்டோ ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும் என முதலமைச்சர் பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்