August 11, 2017

நமது தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக _அரசு பள்ளிகள் சாதனை படைக்க_ முயற்சித்து வருகின்றன என்ற கூற்று உண்மையா...?*

👉ஆம் உண்மைதான்!!!
நமது இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மொத்தம் 352 மாணவர்கள் படிக்கின்றனர்.



👉தலைமை ஆசிரியர், 3-பட்டதாரி ஆசிரியர்கள், 7-இடைநிலை ஆசிரியர்கள், 3- பகுதி நேர ஆசிரியர்கள் என பணியாற்றி வருகின்றனர்.


👉 இப்பள்ளி ஆசிரியர் *செந்தில்நாதன்* இப்பள்ளியில் பல புதுமைகளை புகுத்தி வருகிறார்.


👉 *4-D தொழில் நுட்பம்:*          இங்கு அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் வழங்கப்பட்டுள்ள *லேப்டாப், புரொஜக்டர்* மூலம் மாணவர்களுக்கு '4-D' தொழில் நுட்பத்தில் கல்வி கற்பித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.


✍ இதனால்,  மாணவர்கள் அனைவரும் *தமிழ், ஆங்கிலம், கணிதம்* என அனைத்துப் பாடங்களிலும் மிகவும் சிறந்த வாசிப்புத் திறனும், *நுண்ணறிவும்* பெற்றுள்ளனர்.
                             

👉 *மாணவர் கையேடு:*   மெட்ரிக் பள்ளிகளில் வழங்கப்படும் மாணவர் கையேட்டைப் போன்று இப்பள்ளி மாணவர்களுக்கும் கிடைக்க ஏற்பாடு செய்தார். இதன் காரணமாக கடந்த 5-ஆண்டுகளாக மாணவர்களுக்கு கையேடு வழங்கப்பட்டு வருகிறது. முதலில் கடைகளில் கிடைக்கும் மாணவர்கள் கையேட்டை வழங்கி வந்தனர். தற்போது
பள்ளி விபரங்களுடன் வெளியிட *செந்தில் நாதன்* முயற்சி எடுத்துள்ளார்.


👉 *பெற்றோர் ஒத்துழைப்பு:* பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் *அமீன் மாலிக் உசேன்*, கிராம கல்விக்குழுத் தலைவர் *ஜாஸ்மின் நிஜார்* ஆகியோர் பெற்றோர் கழக கூட்டத்தை கூட்டினர். அதில் மாணவர்களுக்கு கையேடு வழங்குவதற்கான
செலவு தொகையை பெற்றோர்களே  ஏற்பது என முடிவு செய்யப்பட்டது.


✍ *மாணவர் கையேடு:* கையேட்டில் பள்ளியில் உள்ள அனைத்து
விபரங்கள், ஆசிரியர்கள், அவர்களது படிப்பு, மாணவர்கள், அவர்களின் செயல்பாடுகள், போட்டிகளில் பங்கேற்ற மாணவர்கள், சாதனை படைத்த மாணவர்கள், பள்ளிகளின் விதிமுறைகள், மாணவர்களுக்கு வழங்கப்படும் அரசின் நலத்திட்ட உதவிகள், தேசிய கீதம், தமிழ்தாய் வாழ்த்து, மாணவர்கள் உறுதிமொழி, பெற்றோர்கள் உறுதிமொழி, அவர்களது  அலைபேசி எண்கள் உட்பட அனைத்து விபரங்களும் இடம் பெற்றுள்ளன.
இதில் தினசரி பள்ளி நடவடிக்கை, மாணவர்களின் திறன், வீட்டுப்பாடம் உள்ளிட்ட குறிப்புகள் பெற்றோருக்கு வழங்கப்பட்டு வருகின்றன.


✍ *ஆசிரியர் செந்தில்நாதன் கூறியதாவது:*
எங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தனியார் பள்ளிக்கு இணையான கல்வித்தரம், வசதிகளை பெற வேண்டும் என நினைத்தோம். அதற்கு பெற்றோர், தலைமை ஆசிரியை தமிழரசி, மற்ற ஆசிரியர்கள் ஒத்துழைப்பு வழங்கினர். இதன் காரணமாகவே மாணவர் கையேட்டில் மாணவர்கள் படைப்பு, பள்ளி செயல்பாடு குறித்த ஆண்டுமலர் வெளியிட முயற்சித்து வருகிறேன். இந்த ஆண்டு கண்டிப்பாக வெளியிடப்படும், என்றார்.


✍ *தலைமை ஆசிரியை தமிழரசி கூறியதாவது:*
பெற்றோர், ஆசிரியர்கள் ஒத்துழைப்போடு கல்வி-வசதிகள் போன்றவற்றில் தனியார் பள்ளிகளுடன் போட்டி போட்டு எங்கள் பள்ளி வெற்றி நடைபோட்டு வருகிறது. தொடர்ந்து இதனை செயல்படுத்த
உள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்