July 06, 2017

போலி சாதி சான்றிதழ் கொடுத்து பட்டம் பெற்று இருந்தால் அந்த பட்டம் செல்லாது, அரசு பணி பெற்று இருந்தால் அவர்களை எத்தனை ஆண்டுகளுக்கு பின்னரும் பணி நீக்கம் செய்யலாம் - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.



🔹 போலி சாதி சான்றிதழ் கொடுத்து அரசு பணி பெற்றிருந்தால் அவர்களை பணிநீக்கம் செய்யலாம் என மகாராஷ்டிரா அரசு, சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.

🔸 இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்மகாராஷ்டிரா அரசின் உத்தரவு செல்லாது என மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.


🔹 மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மகாராஷ்டிரா அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

🔸 இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஒருவர் சாதி போலி சான்றிதழ் கொடுத்து அரசு பணி பெற்றிருந்தாலோ அல்லது பட்டம் பெற்றிருந்தாலோ அவர்களின் பதவியை பறிக்கலாம் என உத்தரவிட்டது. மேலும் மும்பை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்து பரபரப்பான தீர்ப்பை வழங்கி உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்