கோடை விடுமுறை முடிந்து, நாளை பள்ளிகள் திறக்கப்படுகின்றன. முதல் நாளிலேயே, இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு தொடக்கப் பள்ளிகளில், ஏப்., 22; உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், ஏப்., 14 முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
ஜூன், 1ல் பள்ளிகள் திறப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கோடை வெயில் வாட்டியதால், விடுமுறை காலம், ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து, இன்றுடன் கோடை விடுமுறை முடிவுக்கு வருகிறது; நாளை பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில், மதிய உணவு சாப்பிடும் மாணவ, மாணவியருக்கு, நாளையே இலவச பாடப்புத்தகம் மற்றும் நோட்டுகள் வழங்க, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்