அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களை தகுதியான ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் என, தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தச் சங்கத்தின் இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டம் திட்டக்குடியில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்தில், சென்னையில் வருகிற 7-ஆம் தேதி மாநில சங்கம் சார்பில் நடைபெற உள்ள கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பி.எட்., கணினி ஆசிரியர்களும் கலந்துகொள்வது,
அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை கட்டாயப் பாடமாக வரும் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்த வேண்டும்,
சமச்சீர் கல்வியில் கொண்டுவந்த கணினி அறிவியல் பாடத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும், அதற்காக அச்சிடப்பட்ட பாடப் புத்தகங்களை மாணவர்களுக்கு உடனே வழங்க வேண்டும்.
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களை தகுதிவாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்