🔸 தமிழக அமைச்சரவையின் மூன்றாவது கூட்டம் இன்று மதியம் நடந்து முடிந்தது.
🔹 அதன் பிறகு தமிழகத்தில் விழுப்புரம், தருமபுரி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மூன்று இடங்களில் புதிய சட்டக் கல்லூரிகள் ஏற்படுத்தப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி ஆணையிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
🔸 அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
🔹 நடப்பு 2017-18-ஆம் கல்வி ஆண்டிலேயே இந்த மூன்று புதிய சட்டக் கல்லூரிகளும் துவங்கப்படும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகம் வாயிலாக இதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.
🔸 ஆண்டுக்கு 20 மாணவர்கள் என்ற அடிப்படையில் முதல்கட்டமாக 3 மற்றும் 5 ஆண்டு பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
🔹 இதற்கான இதர பணிகளுக்காக ரூ.6.81 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்