May 29, 2017

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் முன்கூட்டியே பணி நிரவல் : ஆசிரியர்கள் அதிர்ச்சி.


பள்ளி கல்வித்துறையில் 2017ம் ஆண்டு மாணவர்கள் எண்ணிக்கையை வைத்து, பணி நிரவல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அரசுப் பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஆசிரியர்கள் பணி நிரவல் செய்யப்படுவார்கள். 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலையில் பணி நிரவல் செய்யப்படும்.

இந்நிலையில் மே 29, 30ல் அறிவித்தபடி ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும்.

 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்குப் பின், 2017--18ம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை முடிந்தவுடன், ஆசிரியர்களுக்கு பணி நிரவல் நடத்த வேண்டும்.

அப்படி நடத்தாமல் முன்கூட்டியே பணி நிரவலை நடத்துவதால், சொந்த மாவட்டங்களுக்கு பணி மாறுதல் பெறுவதற்காக, பல ஆண்டுகள் காத்திருக்கும் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள்.

மேலும், சொந்த மாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் வேறு மாவட்டங்களுக்கு செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கடுமையாக பணியாற்றியதன் விளைவாக, பொதுத்தேர்வுகளில் அந்த பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

இதனால் அரசுப் பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பணி நிரவல் நடத்துவதால், பல ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள்.

இதுதொடர்பாக ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுவதாவது:

பொது கலந்தாய்வு நடக்கும்போது, ஆசிரியர்களுக்கு தங்கள் விருப்பப்படியே இடமாறுதல் பெற வாய்ப்பு கிடைக்கும். இந்தாண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும்.

 மாணவர்கள் சேர்க்கை முடிவடைந்த பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் பணி நிரவல் நடத்தினால், அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்