May 27, 2017

TNPSC இணையதளம் 2 நாட்களாக சரியாக இயங்கவில்லை குரூப் 2A தேர்வுக்கு பதிவு தேதியை நீட்டிக்க தேர்வர்கள் கோரிக்கை...



குரூப் 2ஏ தேர்விற்கு விண்ணப்பிக்க மே 26ந் தேதி நேற்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் கடந்த இரண்டு நாட்களாக டிஎன்பிஎஸ்சி இணையதளம் சரியாக வேலை செய்யவில்லை அதனால் விண்ணப்பிக்க முடியவில்லை என பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

மறுவாய்ப்பு வழங்க வேண்டும் என விண்ணப்பதாரர்கள் தெரிவித்துளளனர்.
நேர்முக தேர்வு இல்லாத டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ தேர்வுக்கான காலிப்பணியிடங்களுக்கு வழக்கமாக அதிகமானோர் விண்ணப்பிப்பார்கள்.

அதன்படி 41 துறைகளில் 1953 காலிப்பணியிடங்கள் குரூப் 2 ஏ தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ளது.
குரூப் 2ஏ தேர்விற்கு நேற்று கடைசி நாள் என்று தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது.
ஆனால் கடந்த இரண்டு நாட்களாக சர்வர் சரியாக வேலை செய்யவில்லை என்று விண்ணப்பிக்க விரும்பிய பலரும் குறை கூறியிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்