May 23, 2017

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாற்றம், தேர்வு நேர மாற்றம், 1 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றம்... என பல அதிரடி மாற்றங்களை அறிவித்தார் - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.




சென்னை: பிளஸ் ஒன், பிளஸ் டூ பொது தேர்வில் மாற்றம் கொண்டுவரப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ளார். 

தேர்வு நேரம் குறைப்பு

பிளஸ் ஒன், பிளஸ் டூ வகுப்புகளுக்கு இனி தலா 600 மதிப்பெண்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

பிளஸ் ஒன், பிளஸ் டூ சமமான முக்கியத்துவம் தர மொத்தம் 1200 மதிப்பெண் வழங்கப்படுகிறது. 

ஒவ்வொரு பாடங்களிலும் 10 சதவீதம் மதிப்பெண் அகமதிப்பீடாக அளிக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

 பிளஸ் ஒன் தேர்வில் தோல்வியுற்றால்  பிளஸ் டூ படிக்கும் போது அந்த பாடத்தை எழுதிகொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார். 

பிளஸ் டூ தேர்வு நேரம் 3 மணியில் இருந்து 2.30 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. 

11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு

நடப்பாண்டு முதல் 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். 

மாணவர்கள் போட்டித் தேர்வில் பங்கேற்கும் வகையில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. 

மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

முதுநிலை ஆசிரியர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தேர்வு மூலம் ஆசிரியர்கள் தேர்வாகும் வரை தற்காலிக பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 

பாடத்திட்டங்கள் மாற்றம்

1 முதல் 12-ம் வகுப்பு வரை பாடத் திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன.

 1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் 2018-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும்.

 2,7,10,12-ம் வகுப்புகளுக்கான பாடத் திட்டம் 2019-ல் மாற்றியமைக்கப்படும். 

3,4,5,8-ம் வகுப்புகளுக்கான பாடத் திட்டம் 2020-ல் மாற்றப்படும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

செய்முறை கையேடு மாணவர்களுக்கு அரசே வழங்கும். 

சி.பி.எஸ்.இ.-க்கு இணையாக பாடநூல்கள் மாற்றி அமைக்கப்படும். ஆனால் தமிழ்ப் பண்பாடு, கலாச்சாரம் சிதையாமல் பாடநூல்கள் உருவாக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். 

6 முதல் 10-ம் வகுப்பின் அறிவியலில் ஒரு பகுதியாக ஐ.டி. கல்வி கற்பிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார்.

+2 வகுப்பில் 1200 மதிப்பெண்ணை 600 மதிப்பெண்ணாக குறைத்து அரசு நடவடிக்கை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

+1வகுப்பில் 600 மதிப்பெண் & +2வகுப்பில் 600 மதிப்பெண் என பிரித்து வழங்கப்படும்

தேர்வு நேரம் 3 மணியிலிருந்து 2.30 மணிநேரமாக குறைப்பு.

பள்ளி வேலை நாட்களில் மாணவர்களுக்கு 1 மணி நேரம் பயிற்சி, சனிக்கிழமைகளில் 3 மணி நேரம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.

மாணவர்களுக்கு சிறப்பு கையேடு வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 2018-ம் ஆண்டில் 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு பாடத் திட்டம் மாற்றப்படும்.

2019-ம் ஆண்டில் 2, 7, 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும்.

2020-ம் ஆண்டில் 3, 4, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம் அறிமுகம் செய்யப்படும்.

நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

11-ம் வகுப்பில் தோல்வி அடையும் மாணவர்கள், தொடர்ந்து 12-ம் வகுப்பில் படிப்பார்கள்.

11ம் வகுப்பில் தோல்வியடையும் மாணவர்கள், ஜூன், ஜூலை மாதத்தில் நடைபெறும் சிறப்புத் தேர்வில் எழுதலாம்.

     ☆  ☆  ☆  ☆  ☆  ☆  ☆  ☆  ☆  ☆  ☆

கல்வித்துறை மாற்றங்கள் 11&12 வகுப்பு
----------------------------------------------
மொழிப்பாடம் 1 (தமிழ்) & 2 (ஆங்கிலம்)
----------------------------------------------
அகமதிப்பீடு மதிப்பெண்    10
கேள்வித்தாள் (தேர்வு)      90
மொத்தம்                         -------
                                           100
                                         --------

செய்முறைத்தேர்வு உள்ள பாடங்கள்
--------------------------------------------
அகமதிப்பீடு                     10
செய்முறை மதிபெண்     20
கேள்வித்தாள்(தேர்வு)    70

மொத்தம்                       100
                                     -----------


செய்முறை அல்லாத பாடங்கள்
—--------------------------------------
அகமதிப்பீடு மதிப்பெண்    10
கேள்வித்தாள் (தேர்வு)      90
மொத்தம்                         -------
                                           100
                                         --------

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்