April 08, 2017

TNTET 2017 - நாளைய வெற்றிக்கான (வெற்றிக்கனி) இன்றைய விதைகள். (தன்னம்பிக்கை வரிகள் Mr. பிரதீப்)


🔹 முதல் முறை தேர்வு எழுதுபவரா பயம் வேண்டாம். முதல் முயற்சி வலிமை மிக்கது.

🔸 முந்தைய தேர்வுகளில் வெற்றி வாய்ப்பை இழந்தவரா நீங்கள் - கவலை வேண்டாம் - அறிவும் சுழலும் முரண்பட்டது. இணையும் போது வெற்றி நிச்சயம்.



🔸வயது அதிகம் மறதி என்ற பயம் இருந்தால் அகற்றுங்கள். அனுபவமே கல்வியின் அடித்தளம். மன நிலையை ஒருநிலை படுத்துங்கள். இளைஞரை விட பல மடங்கு திறன் பெற்றவர் ஆவிர்.

🔹 வழிகாட்டுதல் இல்லை என்ற நிலை இருப்பின் வருத்தம் வேண்டாம். நம்பிக்கை உடன் படியுங்கள்

🔸 மறதி, சோர்வு , சலிப்பு வருகிறாதா? கண்டிப்பாக ஏற்படும். நம்பிக்கை விதையுங்கள் இவை களை செடியாய் மறைந்து விடும்.

🔹 படிக்கும் பகுதி அதிகம் என்ற பயம் உள்ளதா ? ஒரு எண்ணத்தை மனதில் விதையுங்கள்  " I முதல் 10 வகுப்பு மாணவன் படிப்பதை நம்மால் எளிதாக படிக்க முடியும் என "

🔸 போட்டியாளர் அதிகம் என பயமா? எவரை பற்றியும் கவலை வேண்டாம். ஓடும் குதிரையில் முதல் குதிரை நான் என கொள்ளுங்கள்.

🔹 நேரம் போத வில்லையா?
இருக்கும் நேர்த்தை மிக நேர்த்தியாக பயன்படுத்துங்கள்.

🔸 பணி இடம் இருக்குமா ? எவ்வளவு இருந்தாலும் கவலை இல்லை. 1 பணியிடமாவது கிடைக்கும் அது எனக்கு என முடிவு கொள்ளுங்கள்.

🔹 அட்டவணை படி படிக்க இயலவில்லையா ? கவலை வேண்டாம். நாம் இயந்திரம் அல்ல இட்டதை எட்ட. இயன்ற வரை போராடுவோம்.

🔹உளவியல் பாடம் புரிய வில்லையா ? வாழ்வியலுடன் தொடர்பு படுத்தி படியுங்கள்.

🔸 கணிதம் வரவில்லையா? புத்தக கணக்கை தீர்த்து பாருங்கள். தேர்ச்சி மதிப்பெண் நிச்சயம்.

🔹 கனவை நீக்குங்கள். நிஜத்தில் வாழுங்கள். இன்றைய முயற்சியே
நாளைய வெற்றி.

🔸 எண்ணம் தெளிவாகட்டும்
இலக்கு
உயர்வாகட்டும் 👍

🔹 நேர்மறை எண்ணம் நேர்மறை முடிவு தரும்.

🔸 எதுவாக நினைக்கிறாயோ அதுவாக மாறுகிறாய் - சுவாமி விவேகானந்தர்.

வாழ்த்துகளுடன்: தேன்கூடு

Thanks to

Mr. பிரதீப்,
பட்டதாரி ஆசிரியர் (கணிதம்)
பூங்குளம்,
வேலூர் மாவட்டம்.

2 comments:

Sridev said...

Good motivation sir. Nice work

வேலாயுதம் ஆம்பூர் said...

Thanks Mr PRADEEP sir i want your phone no

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்