April 27, 2017

TNTET - முந்தைய தேர்வுகளில் தேர்ச்சி பெற்றும் பணி வாய்ப்பை பெறாத நபர்களுக்கான 1,114 காலிப் பணியிடங்களின் பாட வாரியான தகவல்கள் - TRB வெளியீடு. (TET - 1114 BT Assistant Post - Vacancy List Published by TRB)


                                   👇
             
Click here to Download 👉  PDF File (8 Pages)


🔸 ஏற்கெனவே நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வுகளில் தேர்ச்சிபெற்றவர்களைக் கொண்டு நிரப்பப்படும் 1,114 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் பாடப்பிரிவு வாரியான காலியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.



🔹 இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு (TNTET 2017) ஏப்ரல் 29 & 30 தேதிகளில் நடைபெறுகிறது.

🔸 ஏற்கெனவே 2012, 2013, 2014-ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று சுமார் 32,500 நபர்கள் பணி வாய்ப்பை பெறாமல் இருக்கிறார்கள்.

🔹 அவர்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால் பாதிக்கப்பட்டிருப்பதால் தங்களை பணியில் அமர்த்திய பின்பு புதிதாக தேர்ச்சி பெறுவோருக்கு பணி வழங்க வேண்டும் என்று அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

🔸 இந்த நிலையில், ஏற்கெனவே நடத்தப்பட்ட தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு 1,114 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுசெய்துள்ளது.

🔹 இந்த காலியிடங்கள் பள்ளிக் கல்வித்துறை, தொடக்கக் கல்வித் துறை, சமூக பாதுகாப்புத்துறை, மத்திய இடைநிலை கல்வி திட்டம் (RMSA) ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளன.

🔸 அந்த பணியிடங்களில் பாடப்பிரிவுகள் வாரியான காலியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

🔹 நிரப்பப்படும் காலியிடங்களில் புவியியல், வரலாறு, தமிழ் ஆகிய பாடப்பிரிவுகளில் தான் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

🔸 அதிலும், எஸ்சி, எஸ்டி வகுப்பினர், பிசி (முஸ்லிம்) ஆகிய இட ஒதுக்கீட்டினருக்கான காலியிடங்கள் அதிகமாக இருக்கின்றன.

🔹 துறை வாரியாகவும் பாடப் பிரிவுகள் வாரியாகவும், இட ஒதுக்கீட்டுப் பிரிவு வாரியாகவும் காலியிடங்களின் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

🔸 மேற்குறிப்பிட்ட பணி நியமனத் துக்காக முந்தைய ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்றவர்கள் தனியாக ஏதும் விண்ணப் பிக்கத் தேவையில்லை.

🔹 அவர்களின் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஏற்கெனவே உள்ளது.

🔸 முன்பு பணிக்கு தேர்வு செய்யப்பட்டு வேலையில் சேராமல் தற்போது சேர விரும்புவோர் மட்டும் மே 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

🔹 இதற்கான விண்ணப்பத்தை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அதன் தலைவர் காகர்லா உஷா அறிவித்துள்ளார்.

🔸 தகுதியான விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர்.

🔹 அது முடிந்ததும் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் முன்னுரிமை (மெரிட்) பட்டியல் தயாரிக்கப்பட்டு தெரிவு (Selection List) பட்டியல் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்