April 16, 2017

கல்விதகுதியில் முதலிடம் அரசுபள்ளி ஆசிரியர்கள் தான்...


இப்பதிவு  தினசரி நாளிதழ் ஒன்றில் வெளிவந்துள்ள தவறான தகவலுக்கு பதில் பதிவாக அமையும் ...

"ஆங்கிலம் தெரியாத அரசுபள்ளி ஆசிரியர்கள் " என செய்தி வெளியிட்டிருக்கும் அந்நாளிதழ் எந்த அடிப்படையில் அவ்வாறு எழுதியது என்று தெரியவில்லை...


தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும் 90℅ ஆசிரியர்கள் வெறும் D.TED எனும் பட்டய சான்று மட்டும் படித்துவிடவில்லை... பணிக்கு வந்த பிறகோ பணிக்கு வருவதற்கு முன்போ 90℅ ஆசிரியர்கள் இளங்கலை , முதுகலை உடன் B.Ed., M.Ed., & M.Phil., உட்பட தேர்ச்சி பெற்றவர்களே.

ஆரம்ப கல்வி பயிலும் மாணவர்களுக்கு அக்கல்வித்தகுதி போதாது என்று அந்நாளிதழ் நினைக்கறதா ? அல்லது தனியார் பள்ளி ஆசிரியர்கள் இதை விட கூடுதல் கல்விதகுதி பெற்றுள்ளனர் என நிரூபிக்க இயலுமா...

சரி மாணவர் சேர்க்கைக்கு இதுவரை அரசு எடுத்த நடவடிக்கை என்ன ?

தனியார் பள்ளிகள் போல வெற்று விளம்பரங்கள் அரசு பள்ளிக்கு உள்ளதா ?

அரசுபள்ளி ஆசிரியர்கள் அரட்டை அடிப்பதாக சொல்கிறது அந்நாளிதழ், ஏனெனில் கற்பித்தல் பணி மட்டும் தானே தரப்படுகிறது...

என்னென்ன பிற பணிகளை அரசுபள்ளி ஆசிரியர்கள் செய்கிறார்கள் என்பதை யாவரும் அறிவர் , யாரை முன்னிலைபடுத்தி சேரை வாரி வீசிவிட வேண்டாம்...

 ஆசிரியர் தகுதி தேர்வு வந்த பிறகு மிக திறமையான ஆசிரியர்களே பணியேற்க முடியும் என்பதை மக்கள் பார்த்து கொண்டுதான் உள்ளனர்...

கௌரவம் பார்த்து தனியார் பள்ளிக்கு செல்லும் பெற்றோர்கள் சற்று சிந்தித்து பாருங்கள்..

அரசு பள்ளிகள் தரம் மேம்பாடு ஒட்டு மொத்த சமுதாயத்தையும் சார்ந்துள்ளது என்பதை உணரவேண்டும்...

அரசு பள்ளி மாணவர் சேர்க்கைக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை , நாளிதழ்கள்  தவறான தகவல்களை பரப்புரை செய்ய வேண்டாம் என்பதே ஆசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது...

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்