April 01, 2017

ஸ்மார்ட் ரேஷன் கார்டு திட்டத்தை தொடங்கி வைத்தார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி.





💳 ரேஷன் கார்டுக்கு பதிலாக ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

💳 ரூ.330 கோடி ஸ்மார்ட் கார்டு திட்டத்தை சென்னை கொரட்டூரில் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

🔸 2009-ம் ஆண்டுக்குப் பிறகு, குடும்ப அட்டைகளில் உள்தாள் ஒட்டப்பட்டு வருகிறது.

🔹 எட்டு ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின், சென்னை தவிர்த்த மற்ற பகுதிகளில், இன்று முதல் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகிறது.

🔸 திருவள்ளூர் மாவட்டம், கொரட்டூரில் நடைபெறும் விழாவில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஸ்மார்ட் கார்டுகளைப் பொதுமக்களுக்கு வழங்கி, திட்டத்தை தொடங்கிவைக்கிறார்.

🔹 ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 ஆயிரம் என தமிழகம் முழுவதும் 15 லட்சம் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வினியோகம்செய்யப்பட உள்ளன.

🔸 குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் எண் மற்றும் செல்போன் எண்கள், இந்த ஸ்மார்ட் கார்டு உடன் இணைக்கப்பட்டுள்ளது.

🔹 'பான் கார்டு' வடிவில் இருக்கும் இந்த மின்னணு ரேஷன் கார்டில், முதல் பக்கத்தின் மேல் பகுதியில் அரசு முத்திரையுடன், 'உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை' என, அச்சிடப்பட்டிருக்கும்.

🔸 இதில், 'கியூ-ஆர்' ரகசியக் குறியீடும் இருக்கும். இந்த ஸ்மார்ட் ரேஷன் கார்டை ஸ்வைப்செய்து, பொருள்களை வாங்க வேண்டும்.

🔹 வாங்கிய பொருள் குறித்த விபரங்கள் SMS மூலம் நாம் பதிவு செய்துள்ள தொலைபேசி எண்ணுக்கு வந்துவிடும்.






No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்